ஜப்பானிய சிகிச்சை
சுகாபூர் (குஜராத்):
குஜராத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதி நவீன மருத்துவ முறைப்படி, ஜப்பான் செஞ்சிலுவைச் சங்கம் மூலம் அனுப்பப்பட்ட மருத்துவக்குழுசிகிச்சை அளித்து வருகிறது.
முதலில் பூகம்பத்தால் காயமடைந்தவர்களை டிஜிட்டல் கேமிராவில் படமெடுக்கிறார்கள். பின்னர் அவற்றை லேப் - டாப் கம்ப்யூட்டரில் பதிவு செய்துகொள்கிறார்கள். இவற்றை சாட்டிலைட் தொலைபேசி இணைப்பு மூலம் ஜப்பான் மருத்துவமனைகளில் உள்ள டாக்டர்களுக்கு இணைப்புக் கொடுத்துவிடுகிறார்கள்.
காயம்பட்டவர்கள் குறித்து அறிந்து கொண்ட டாக்டர்கள், என்னென்ன சிகிச்சை அளிக்க வேண்டும்? எவ்வாறு சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதுகுறித்து ஈ மெயில் மூலம் குஜராத்தில் பூகம்பம் ஏற்பட்ட பகுதிகளில் முகாமிட்டுள்ள அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கு குறிப்புகள் கொடுக்கிறார்கள்.இதையடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையான, நவீன சிகிச்சைகள் உடனடியாக அளிக்கப்படுகிறது.
குஜராத் மாநிலத்தில் உள்ள கட்ச் மாவட்டத்திலுள்ள பூஜ் மற்றும் சுஹாபூர் பகுதிகளில் பலர் மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். பூகம்பம்ஏற்பட்ட ஜனவரி 26 ம் தேதி முதல் ஜப்பான் உள்பட பல நாடுகளிலிருந்து மருத்துவக் குழுக்கள் குஜராத்தில் முகாமிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்குசிகிச்சை அளித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.