For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அயோத்தி விவகாரம் .. ஹைகோர்ட் புது உத்தரவு

By Staff
Google Oneindia Tamil News

லக்னோ:

உத்தரப்பிரசேத மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட சம்பவம் குறித்து அலகாபாத்உயர்நீதிமன்றத்தில் நடந்து வந்த விசாரணை திங்கள்கிழமை உத்தரப்பிரதேச அரசுக்கு மாற்றப்பட்டுள்ளது.

அயோத்தியில் பாபர் மசூதிய இடிக்கப்பட்ட சம்பவத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அத்வானி மற்றும்அமைச்சர்கள் முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி ஆகியோர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் 1996 ம் ஆண்டு டிசம்பர் மாதம் பாபர் மசூதி இடிக்கப்பட்டது.இச்சம்பவத்திற்குப் பின்னணியில் மத்திய அமைச்சர் அத்வானி உள்பட 8 பேரின் மீது குற்றம் சுமத்தப்பட்டு அந்தவழக்கு அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

திங்கள்கிழமை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜகதீஷ் பல்லா கூறுகையில்,இவ்வழக்கு முழுவதுமாக மாநில அரசிடம் ஒப்படைக்கப்படுகிறது. இனி மேல் பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்குதொடர்பாக மாநில அரசுதான் விசாரிக்கும் என்றார்.

அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் இந்த முடிவை வரவேற்பதாக பாரதிய ஜனதா கட்சி கூறியுள்ளது.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X