For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரூ.1கோடியில் மருத்துவ மூலிகை வளர்ப்பு

By Staff
Google Oneindia Tamil News

கோவை:

தமிழகத்தில் 16 இடங்களில் ஒரு கோடி ரூபாய் செலவில் மருத்துவ மூலிகைச் செடிகளை வளர்க்கும் திட்டத்தைமாநில அரசு மேற்கொண்டுள்ளது என தலைமை வனப் பாதுகாவலர் சித்ரப்பூ தெரிவித்தார்.

கோவை மேற்குப் பகுதியில் உள்ள இந்திராகாந்தி வன உயிரியல் பூங்காவை பார்வையிட வந்திருந்த சித்தரப்பூநிருபர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைகளில் அதிக அளவு மூலிகைச் செடிகளைவளர்க்க அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்த மூலிகைச் செடி மூலம் வனத்துறைக்கு வருவாய்கிடைக்கிறது.

நீலகிரி, ஏலகிரி, கொல்லிமலை போன்ற இடங்களில் இந்த மூலிகைப் பண்ணை அமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம்வனத்துறைக்கு கடந்த ஓராண்டில் 131 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. இதில் பெருமளவு மரங்கள்விற்பனை மூலம் கிடைத்துள்ளது.

ஆனைமலை, முதுமலை ஆகிய இடங்களில் சுற்றுலாப் பயணிகள் வருகையால் ரூ, 40 லட்சம் வருவாய்ஈட்டப்பட்டுள்ளது. மேலும், ஜப்பான் நாட்டு உதவியுடன் தமிழகத்தில் காடு வளர்ப்புத் திட்டம் நல்ல முறையில்செயல்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X