எங்க நிபந்தனை என்னன்னா .. ராமகோபாலன்
காஞ்சிபுரம்:
கோவில் பசுக்களை ஏலம் விடாமல் தடுக்கும் வகையில் பசுக்கள் காப்பகம் அமைப்பது உள்பட எங்களது 3 கோரிக்கைகளை நிறைவேற்றினால்தி.மு.க. கூட்டணியை ஆதரிப்போம் என்று இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் தெரிவித்தார்.
காஞ்சிபுரத்தில் நிருபர்களிடம் அவர் கூறுகையில், இந்து சமயக் கோவில்களை நிர்வகிக்க ஓய்வு பெற்ற நீதிபதிகள், காவல்துறை அதிகாரிகள்,மடாதிபதிகள், இந்துமத அமைப்புகளின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவை ஏற்படுத்த வேண்டும்.
கோயில் பசுக்களை ஏலம் விடாமல் அரசே தனி நிலம் ஒதுக்கி பசு காப்பகங்கள் அமைக்க வேண்டும். இல்லையெனில், பசுவை காக்கமுன்வருவோரிடம் ஒப்படைக்க வேண்டும். சிறுபான்மையினருக்கு சாதகமாக உள்ள சென்னை மாநில கல்விச் சட்டத்தின் விதிமுறைகள் பெரும்பான்மைசமுதாயத்திறகும் சாதகமாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நெல்லையில் கொலையுண்ட இந்து முன்னணி பிரமுகரின் குடும்பத்திற்கு உதவிய முதல்வருக்கு நன்றி. அது போல் ராமநாதபுரத்தில் கொலையுண்டவரின்குடும்பத்திற்கும் உதவ வேண்டும்.
இந்த கோரிக்கைகளை நிறைவேற்றினால் தி.மு.க எதிர்ப்பு நிலையிலிருந்து ஆதரவு நிலைக்கு மாறுவது பற்றி பரிசீலிக்கப்படும்.
மதுரை - காசி வரை உள்ள அகல ரயில் பாதையை ராமேஸ்வரம் - காசி வரை விரிவுபடுத்த வேண்டும். தேவாலயங்கள் கட்டிட அனுமதி பற்றிவிசாரிப்பதோடு, தனியார் தொண்டு நிறுவனங்களுக்கு வரும் வெளிநாட்டு நிதி குறித்தும் விசாரிக்க வேண்டும் என்றார் ராமகோபாலன்.