ஆஸி.யுடன் ஆட ஜடேஜா ஆசை
டெல்லி:
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியுடன் விளையாட ஆர்வமாக இருப்பதாக அஜய் ஜடேஜா தெரிவித்துள்ளார்.
அஜய் ஜடேஜா கிரிக்கெட் விளையாட 5 ஆண்டுகள் தடை விதித்து இந்திய கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டுள்ளது. இதற்கு இடைக்கால தடை விதிக்க,ஜடேஜா சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மற்றொரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஜடேஜா தாக்கல் செய்துள்ள மனுவில், தான் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள ஆஸ்திரேலிய அணியுடன் விளையாட மிகுந்த ஆர்வத்துடன்உள்ளேன்.
பிசிசிஐ-ன் உத்தரவை ரத்து செய்யக் கோரும் மனு மீதான விசாரணை முடிந்து தடை விதித்தது சரியல்ல என காலம் கடந்து தெரிய வரும் போது முக்கியமானகட்டத்தை இழந்து விட நேரிடும். எனவே பிசிசிஐ உத்தரவிற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்.
இந்திய அணிக்காக வழக்கம் போல் தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதாக பிசிசிஐ-க்கு உத்தரவாதம் தர தயாராக இருப்பதாகவும்தெரிவித்துள்ளார் ஜடேஜா.












Click it and Unblock the Notifications