கள்ளச்சாராயம் காய்ச்சிய 57 பேர் கைது
சென்னை:
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பல கிராமங்களில் கள்ளச்சாராயம் விற்றது தொடர்பாக போலீஸார் 12 பெண்கள் உள்பட 57 பேரைதிங்கள்கிழமை கைது செய்தனர்.
கள்ளச்சாராய தடுப்புப்பிரிவு போலீஸ் பிரிவு விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பல கிராமங்களில் திடீரென்று சோதனை நடத்தியது. அப்போது கள்ளச் சாராயத்தொழிலில் ஈடுபட்டிருந்த 57 பேர் பிடிபட்டனர். பிடிபட்டவர்களிடமிருந்து 1,40, 000 லிட்டர் சாராயம் வைக்கப்பட்டுள்ள பாக்கெட்டுகள் பறிமுதல்செய்யப்பட்டன.
கள்ளச் சாராய தடுப்புப் பிரிவு இயக்குநர் ஆர்.நடராஜன் தலைமையில் போலீஸார் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கள்ளநத்தம், நாகுப்பம், தாக்கரை, விரியூர்,மூலக்காடு, பாலையனூர், கல்வராயன் மலை, வாஞ்சிக்குழு, தும்பராம்பட்டு, எரையூர் மற்றும் எரையூர் பாளையம் ஆகிய கிராமங்களில் சோதனைநடத்தினர்.
சோதனையில் 577 பாட்டில்களில் அடைத்து வைக்கப்பட்ட கள்ளச்சாராயம் கைப்பற்றப்பட்டது. இதே போலீஸார் கடந்த சனிக்கிழமை சென்னையில்கள்ளச்சாராயம் விற்றது தொடர்பாக இரண்டு பேரைக் கைது செய்தனர்.
தற்போது கைது செய்யப்பட்ட 57 பேரின் தலைவராக சென்னை பர்மா பஜாரைச் சேர்ந்த ஒருவர் செயல்படுகிறார் என்று போலீஸாருக்கு ரகசியத்தகவல்கள் கிடைத்துள்ளது. இதுகுறித்துப் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஐ.ஏ.என்.எஸ்.