இனிமேல் இ - புக்ஸ் மட்டுமே!
கோலாலம்பூர்:
மலேசியாவில் பள்ளி பாடப் புத்தகங்கள் இனிமேல் மின்னணு புத்தகங்களாக (இ-புக்ஸ்) வெளிவர இருக்கின்றன.
மலேசியாவில் உள்ள 100 பள்ளிகளை சேர்ந்த 8000 மாணவர்கள் அடுத்த ஆண்டு முதல் முறையாக இப்புத்தகங்களை பயன்படுத்த உள்ளனர். இத்திட்டம்வெற்றி பெற்றால் 2007 க்குள் அனைத்து வகுப்புகளுக்கும் மின்னணு புத்தகங்கள் வெளியிடப்படும் என மலேசிய அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.
எரிக்ஸன் டெலிகம்யூனிகேஷன் நிறுவனமும், கேடா ஸ்டேட் டெவலப்மெண்ட் கார்ப்போரேஷனும் இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்த உள்ளன.கேடாவில் நிறுவப்படும் ஒரு நிறுவனம் மின்னணு புத்தகங்களை தயாரிக்கும். மலேசிய பல்கலைக் கழகங்களை சேர்ந்த நிபுணர்கள் ஆசிரியர்களுக்கு இப்புத்தகங்களைபயன்படுத்துவது குறித்து பயிற்சியளிப்பர்.
இத்திட்டத்தின் மேலாளர் கூறும் போது குழந்தைகளுக்கும் கம்ப்யூட்டர் கல்வி அளிப்பதோடு மாணவர்களின் புத்தக சுமையை குறைக்கவும் இத்திட்டம்உதவும் என்றார். கோலாலம்பூரில் இருந்து 50 கி.மீ.தொலைவில் மலேசிய அரசு கம்ப்யூட்டர் நகர் ஒன்றை உருவாக்கி வருகிறது.












Click it and Unblock the Notifications