சோ நாடகமாடுகிறார் .. மூப்பனார்
சென்னை:
தமிழகத்தில் வரும் சட்டசபைத் தேர்தலில் அதிமுக, தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணி தான் வெல்லும் என்று கூறிதுக்ளக் ஆசிரியர் சோ நாடகமாடுகிறார் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் மூப்பனார் திங்கள்கிழமைதெரிவித்தார்.
இதுகுறித்து சென்னை சத்யமூர்த்தி பவனில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகி அ.தி.மு.க.வுடன் கூட்டு சேர்ந்துள்ளது பா.ம.க. நாங்கள் இருக்கும்அ.தி.மு.க.வில், பா.ம.க. கூட்டணி சேர்ந்தது குறித்து எங்களுக்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்படாது. மதச்சார்பற்றகூட்டணியில் பா.ம.க.யும் ஒரு அரசியல் கட்சி. அவ்வளவுதான்.
கடந்த வெள்ளிக்கிழமை டெல்லியில் சோனியா காந்தியைச் சந்தித்துப் பேசினேன். நாங்கள் பா.ம.க. அ.தி.மு.க.வில்சேர்ந்தது குறித்து எதுவும் விவாதிக்கவில்லை.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின், தேர்தல் கூட்டணி குறித்து இன்னும் ஒரு சில நாட்களில் தெரிவிப்போம். தொகுதிபங்கீடு குறித்து திங்கள்கிழமை வெளியிடுவதாக ஜெயலலிதா கூறியிருக்கிறார் என்கிறார்கள். ஆனால் அதுகுறித்துஎனக்கு எதுவும் தெரியாது.
துக்ளக் பத்திரிக்கை ஆசிரியர் சோ கூறுகையில், தமிழகத்தில் வரும் சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க., த.மா.கா.கூட்டணி வெற்றி பெறும் என்று கூறியிருக்கிறார். அவர் வெறும் நாடகம் ஆடுகிறார் என்றார் மூப்பனார்.
யு.என்.ஐ.