சிறுநீரக மோசடி .. பெங்களூர் ஏஜன்டுக்கு வலைவீச்சு
சேலம்:
சிறுநீரகத்தைக் கொடுத்தவரின் பணத்தை மோசடி செய்த பெங்களூர் ஏஜெண்டைப் போலீசார் தேடி வருகின்றனர்.
கோவையைச் சேர்ந்தவர் முருகேசன். இவர் தனது குடும்பத்துடன் ஈரோடு அருகே உள்ள பள்ளிபாளையத்தில்குடியிருந்து வந்தார். இவர் செய்து வந்த தொழிலில் தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டது. இந்த தொழில் நஷ்டத்தைத்தவிர்க்க முயற்சித்தார். ஆனால், அவருக்கு கடன் தொல்லை தான் அதிகரித்தது. அதோடு தொடர்ந்து தொழில்நடத்த பணம் அதிகமாகத் தேவைப்பட்டது.
இந்த நிலையில் அவரது கஷ்டத்தைக் கண்ட அதே ஊரைச் சேர்ந்த தங்கவேல், அவருக்கு ஒரு யோசனையைச்சொன்னார். அவரது சிறுநீரகத்தை விற்றால் ரூ. 80 ஆயிரம் ரூபாய் பணம் கிடைக்கும் என்றார். இதை நம்பியமுருகேசன், ஒரு சிறுநீரகத்தை அளிக்க முன் வந்தார். இதன்படி பெங்களூரில் உள்ள ஒரு தனியார்மருத்துவனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இவருக்கு முன் பணமாக சிறுநீரக ஏஜென்ட் யூசுப் என்பவர், ரூ 20ஆயிரம் கொடுத்துள்ளார்.
பின்னர் மீதமுள்ள தொகையை அளிப்பதாகத் தெரிவித்தார். மீண்டும் முருகேசன் பணம் கேட்டபோது ரூ. 5ஆயிரம் கொடுத்துள்ளார். இனிமேல் பணம் கேட்டால், கொன்று விடுவேன் என அந்த ஏஜெண்ட் முருகேசனைமிரட்டியுள்ளார். இதையடுத்து முருகன் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து பெங்களூரைச்சேர்ந்த சிறுநீரக ஏஜென்ட் யூசுப்பைத் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications