சுவாமிக்கு "பேட்டா" வழங்குவதை எதிர்த்து வழக்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

குறுக்கு விசாரணைக்கு ஆஜரானதற்காக சுப்ரமணிய சுவாமிக்கு பயணப்படி வழங்க சிறப்பு நீதிமன்றம்உத்தரவிட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் சசிகலா வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

ஜெயலலிதா மீதான வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கில் குறுக்கு விசாரணைக்கு ஆஜரானஜனதாக் கட்சித் தலைவருக்கு முதல் வகுப்பு ரயில் பயணக்கட்டணத்தை பயணப்படியாக வழங்க சிறப்பு நீதிபதிஆறுமுகப்பெருமாள் ஆதித்தன் உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து உயர்நீதி மன்றத்தில் சசிகலா தாக்கல் செய்த மனுவில், சாட்சி முன்னாள் எம்.பி.யாக இருப்பதால்அவருக்கு நாடு முழுவதும் இலவசமாக ரயிலில் பயணம் செய்ய அனுமதி உண்டு. இதனால் சாட்சிடெல்லியிலிருந்து சென்னைக்கு வந்ததற்கான பயணப்படியை அளிக்க வேண்டியது இல்லை.

மேலும், சாட்சியின் சென்னை முகவரிக்கு அனுப்பிய சம்மனை நீதிமன்றத்தின் அனுமதியின்றி சாட்சியின் டெல்லிமுகவரிக்கு மாற்றியனுப்பியது தவறு.

சாட்சி சென்னையில் இல்லை என்று அரசுத்தரப்பில் தெரிவித்திருந்தால் குறுக்கு விசாரணைக்கு சாட்சிஅழைக்கப்படாமல் இருந்திருப்பார் என்று தெரிவித்திருக்கிறார்.

யு.என்.ஐ.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+