வாக்காளர் பட்டியல் .. புதுவை கட்சிகள் புகார்
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரியில் வாக்காளர் பட்டியல் வெளியிட்டதில் நடந்த முறைகேடுகள் குறித்து பல அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
இதுகுறித்து தமிழ் மாநில காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பாலன் கூறுகையில், பாண்டிச்சேரியில் வாக்காளர் பட்டியல் வெளியிட்டதில் பல்வேறு முறைகேடுகள்நடந்துள்ளன. இதுகுறித்து விசாரிப்பதற்காக உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும்.
வீடுகள் பூட்டியிருந்தது என்ற சாதாரண காரணத்திற்காக வாக்காளர் பட்டியலிலிருந்து பல வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது. இதைத.மா.கா. ஒரு போதும் பொறுத்துக் கொள்ளாது என்றார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேசியக் குழு உறுப்பினரும், எம்.எல்.ஏ.வுமான விஸ்வநாதன் கூறுகையில், வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டவாக்காளர்கள் பெயரை உடனடியாக சேர்க்க வேண்டும். இதற்கு அரசு உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.
முன்னாள் முதல்வரும், பாண்டிச்சேரி அ.தி.மு.க.தலைவருமான ராமச்சந்திரன், குனிச்சம்பேட் கிராமத்திலுள்ள 156 வாக்காளர்களின் பெயர்கள்நீக்கப்பட்டுள்ளன. இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாண்டிச்சேரி தேர்தல் அதிகாரிக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
பாண்டிச்சேரி தி.மு.க. அமைப்பாளரும், முன்னாள் முதல்வருமான ஆர்.வி.ஜானகி ராமனும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்றுகூறியுள்ளார்.
யு.என்.ஐ.