For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழ்த் தீவிரவாதிகளுக்கு தடை வருமா?

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழர் மீட்பு படை மற்றும் தமிழ்நாடு மீட்சிப் படை உள்ளிட்ட தமிழ்த் தீவிரவாத அமைப்புகளுக்குத் தடைவிதிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக மத்திய உள்துறை இணை அமைச்சர் வித்யாசாகர் ராவ்தெரிவித்துள்ளார்.

சென்னையில், செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழ்த் தீவிரவாத அமைப்புகளுக்குத் தடைவிதிப்பது குறித்து தமிழக அரசு, மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து மத்திய அரசு பரிசீலித்துவருகிறது.

வீரப்பனைப் பிடிக்கும் முயற்சி முழு வீச்சில் நடந்து வருகிறது. நிச்சயம் வீரப்பன் பிடிபடுவான். வீரப்பனைப்பிடிக்கும் முயற்சியில் கர்நாடக, தமிழக, கேரள போலீஸார் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். தமிழகத்தில்சட்டம், ஒழுங்கு குறித்து கருத்துத் தெரிவிப்பதிற்கில்லை என்றார் அவர்.

தமிழ்த் தீவிரவாத அமைப்புகளுக்குத் தடை விதிப்பது குறித்து மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்திருப்பதாகசமீபத்தில் சட்டசபையில், முதல்வர் கருணாநிதி தெரிவித்திருந்தது நினைவிருக்கலாம்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X