தேர்தலில் போட்டியிட மாட்டார் நாயனார்?
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் நீண்ட காலம் முதல்வராக இருப்பவர் என்ற பெருமையுடைய முதல்வர் ஈ.கே.நாயனார் வரும் சட்டசபைத் தேர்தலில் போட்டியிடமாட்டார் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.
கேரள மாநிலத் தலைநகர் திருவனந்தபுரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களின் 2 நாட்கள் கூட்டம் புதன்கிழமை துவங்குகிறது.வியாழக்கிழமை கூட்டத்தில் விவாதித்த கருத்துக்கள் குறித்து தெரிவிக்கப்படும்.
அப்போது முதல்வர் நாயனார் அடுத்த தேர்தலில் போட்டியிட மாட்டார் என்பது குறித்தும் அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது. மேலும், கேரளசட்டசபைத் தேர்தலில் எந்தெந்த தொகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் என்பது குறித்தும் அறிவிக்கப்படும் என்றும் அக்கட்சிதெரிவித்துள்ளது.
கேரள முதல்வர் நாயனாருக்கு வயது 81. இவர் 1980 - 81 மற்றும் 1987 - 91 ல் கேரள மாநில முதல்வராக இருந்தார். 1996 ல் மூன்றாவதுமுறையாக கேரள மாநில முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். தொடர்ந்து முதல்வராக இருந்து வருகிறார்.
கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ள இடது ஜனநாயகக் கூட்டணி சார்பில் ஈ.கே.நாயனார் முதல்வராக இருந்து வருகிறார். மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சி கூட்டம் முடிந்ததும் நாயனார் சார்பில் தேர்தலில் நிற்கும் அடுத்த வேட்பாளர் பெயரும் அறிவிக்கப்படும்.
இடது ஜனநாயக முன்னணியின் அமைப்பாளராக இருக்கும் அச்சுதானந்தன் முதல்வர் பதவிக்குப் போட்டியிடுவார் என்றும் தெரிகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சி கேரள மாநில செயலாளர் பின்னராயி விஜயனும் வரும் தேர்தலில் போட்டியிட மாட்டார் என்று தெரிகிறது.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications