மின் முறைகேடு: வெள்ளை அறிக்கை கேட்கிறது பா.ஜ.க.
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
தனியார் தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்கியது தொடர்பாகவும், சில தொழிற்சாலைகளுக்கு மின் விநியோகம் செய்ததில் நடந்த முறைகேடுகள்குறித்தும் பாண்டிச்சேரி அரசு வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து, நிருபர்களிடம் பேசிய பா.ஜ.க.பாண்டிச்சேரி பிரிவு பொதுச் செயலாளர் ரகு சுந்தர்ராமன் கூறுகையில், பாண்டிச்சேரியில் மின்சாரப் பற்றாக்குறையைசமாளிக்க அரசு தவறி விட்டது.
பல தொழிற்சாலைகளுக்கு மின்சாரம் வழங்கியதில் பல முறைகேடுகள் ஏற்பட்டுள்ளது. சில மில்களுக்கு 70 சதவீத மின்சாரம் வழங்கப்பட்டு விட்டது.இதனால் பொதுமக்களுக்கு போதிய அளவு மின்சாரம் கிடைக்கவில்லை என்றார் அவர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications