விரைவில் முடிவு .. மூப்பனார் வாய் திறந்தார்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
வரும் சட்டமன்ற தேர்தலில் யாருடன் தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணி வைக்கும் என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்று அதன் தலைவர்மூப்பனார் தெரிவித்தார்.
சென்னையில் நிருபர்களிடம் பேசிய போது, கூட்டணி குறித்து மூப்பனார் இவ்வார இறுதிக்குள் முடிவெடுத்தால் நல்லது என்ற ஜெயலலிதாவின் கருத்துஏற்றுக்கொள்ளக்கூடியதே. அவரின் எதிர்பார்ப்பிற்கு தன்னால் முடிந்ததை செய்வதாக மூப்பனார் கூறினார்.
கட்சியின் தேர்தல் பணிக்குழு கடந்த சில நாட்களாக கூட்டணி குறித்து பல தலைவர்களின் கருத்துகளை அறிந்து அறிக்கை ஒன்றை மூப்பனாரிடம் புதனன்றுஅளித்தது. அதன் மீது தற்போது விவாதம் நடந்து வருகிறது. கட்சியில் பெரும்பாலோர் அதிமுக தலைமையிலான மதசார்பற்ற அணியில் தொடரவிரும்புவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications