For Daily Alerts
Just In
சைக்கிள் நிறுவன ஊழியர்கள் போராட்டம்
சென்னை:
சென்னை அம்பத்தூர் டி.ஐ சைக்கிள் நிறுவனத்தைச் சேர்ந்த அப்பரன்டிஸ் ஊழியர்கள் 300 பேர் ஆர்பாட்டத்தில்ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டனர். தங்கள் பணியை நிரந்தரமாக்கக் கோரி அவர்கள் ஆர்பாட்டத்தில்ஈடுபட்டனர்.
இது குறித்து போலீசார் தெரிவிக்கையில், விடுதலை சிறுத்தை அமைப்பைச் சேர்ந்த ஊழியர் சங்கத்தினர் வேலைக்குசெல்லும் பணியாளர்களை செல்ல விடாமல் தடுத்தனர் என கூறினர்.
இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் அமைப்பினர் பத்திரிக்கைக்குக் கொடுத்துள்ள செய்தியில், 3 மாதங்களுக்குள்அவர்கள் நிரந்தரமாக்கப்பட்டிகருக்க வேண்டும்.
ஆனால் பலரும் 10 ஆண்டுகளாகியும் நிரந்தரமாக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்துஅப்பரன்டிஸ்க்கு நியமிக்கப்பட்டவர்கள் நிரந்தரமாக்கப்படுவார்கள் என்ற உத்திரவாதத்துடன் வேலைக்கு சேர்த்துக்கொள்ளப்பட்டனர்.
யு.என்.ஐ.
Comments
Story first published: Thursday, February 15, 2001, 5:30 [IST]