For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மூப்பனார் - காங். தலைவர்கள் சந்திப்பு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழக காங்கிரஸ் தலைவர்கள் இளங்கோவன், தங்கபாலு, பத்திரிக்கை ஆசிரியர் சோ ஆகியோர் தமிழ் மாநிலகாங்கிரஸ் தலைவர் மூப்பனாரை தனித்தனியே சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினர்.

இந்த சந்திப்பு குறித்து சோ கூறுகையில், நான் மூப்பனாரை அடிக்கடி சந்தித்து பேசி வருகிறேன். என் சந்திப்பில்எந்த விதமான முக்கியத்துவமும் கிடையாது.

அ.தி.மு.க, த.மா.கா. கூட்டணி குறித்து முப்பனார் எந்த முடிவும் எடுக்காத நிலையில் அது பற்றி நான் எதுவும் கூறமுடியாது. சிதம்பரம் மூப்பனாரை தெளிவான முடிவெடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். தெளிவானமுடிவெடுக்கத்தான் மூப்பனார் ஆலோசனை செய்து வருகிறார்.

அ.தி.மு.க., த.மா.கா. கூட்டணியில் சேருவதற்கு தொகுதி பங்கீடு பிரச்சனையாக இருக்கும் என எதுவும் தெரியவரவில்லை. விரைவில் முடிவு எடுக்குமாறுதான் ஜெயலலிதா கூறியிருக்கிறார். கெடு எதையும் விதிக்கவில்லை எனகூறினார்.

முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் மூப்பனாரை சந்தித்து 20 நிமிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். அதன் பின்அவர் நிருபர்களிடம் கூறுகையில், நான் மூப்பனாருடன் தேர்தல் கூட்டணி குறித்து பேச்சு வார்த்தை நடத்தினேன்.

காங்கிரசும். த.மா.கா.வும் இணைந்து தான் தேர்தல் கூட்டணி குறித்து முடிவு செய்யும். காங்கிரஸ் தூதர் விரைவில்வந்து பேச்சு வார்த்தை நடத்தவுள்ளார் அதன் பிறகு கூட்டணி பற்றி முடிவு தெரிந்து விடும் என்றார்.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் இளங்கோவன், இந்திய குடியரசு கட்சி நிர்வாகி தமிழரசன், தமிழக முஸ்லிம்முன்னேற்ற கழக நிர்வாகி ஹைதர் அலி ஆகியோரும் மூப்பனாரை சந்தித்து தேர்தல் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X