ஜாதி, மதமற்ற சமுதாயம் உருவாக வேண்டும்
திருச்சி:
ஜாதி, மதமில்லாத சமதர்ம சமுதாயத்தை அமைக்க வேண்டும் என மத்திய இளைஞர் நல மற்றும் விளையாட்டுத் துறை இணை அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
திருச்சி, அல்லூருக்கு அருகே இருகும் சேவை என்ற தனியார் தொண்டு நிறுவனத்தால், பெண்களுக்கான சுய உதவி அமைப்பை தொடங்கி வைத்து பேசுகையில்அவர் கூறியதாவது:
ஜாதி.மத, இன வேறுபாடின்றி பல தரப்பு மக்களும் குஜராத் பூகம்ப நிவாரண நிதி வழங்கியது வரவேற்கத்தக்கது. ஜாத, மதம் இல்லாத சம தர்மசமுதாயம். அமைக்கப்பட வேண்டும். இதற்கு அரசு சாரத சேவை நிறுவன்ங்கள் முன்வர வேண்டும் என கூறினார்.
அமைச்சர் ரூ 1.35 கோடி கடன் உதவியை பெண்கள் சுய உதவி அமைப்பிற்கு வழங்கினார். இந்த பணம் அவர்கள் சுய தொழில தொடங்கவும், அவர்கள்வீட்டு வசிதிக்காவும் கொடுக்கப்பட்டது.
சேவை அமைப்பின் நிறுவனரும் அதன் இயக்குநருமான டாக்டர் கோவிந்தராஜ் கூறுகையில், திருச்சியில் கிராமங்களில் 1872 சுய உதவி அமைப்புகள்இருக்கின்றன. நகர் புறங்களில் 572 சுய உதவி நிறுவன்ஙகள் இருக்கின்றன என கூறினார்.
யு.என்,ஐ.












Click it and Unblock the Notifications