For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பா.ஜ.க., தி.மு.க. கூட்டணி தொடரும்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழகத்தில் வரும் சட்டசபைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி, தி.மு.க. கூட்டணி தொடரும் என்று மத்திய கிராமப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர்வெங்கையா நாயுடு வியாழக்கிழமை தெரிவித்தார்.

இதுகுறித்து மத்திய கிராம்பபுற மேம்பாட்டுத் துறை அமைச்சரும், மூத்த பா.ஜ.க. தலைவருமான வெங்கையா நாயுடு வியாழக்கிழமை நிருபர்களிடம்கூறுகையில், தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான தே.ஜ. கூட்டணி தொடரும். அதில் எந்த மாற்றமும் கிடையாது என்றார்.

பா.ஜ.க. தலைவர் ஒருவர் முதன் முதலாக அ.தி.மு.க. வுடன் பா.ஜ.க. தேர்தல் கூட்டணி ஏற்படுத்த வேண்டும் என பா.ம.க. கூறியதை ஒப்புக் கொண்டுள்ளார்என்பது குறிப்பிடத்தக்கது. அ.தி.மு.க. பாரதிய ஜனதா கட்சியுடன் உறவு ஏற்படுத்திக் கொள்ள வேறு கட்சிகள் மூலம் முயன்று வருவதாக கூறப்பட்டது.

பிரபல பத்திரிக்கையாளரும், பா.ஜ.க.வின் ஆதரவாளருமான சோ ராமசாமி ஜெயலலிதாவுடன் பல முறை பேச்சு வார்த்தை நடத்தியது கூட அவர் பா.ஜ.க.,அ.தி.மு.க.வுக்கு இடையே ஏற்பட்டிருந்த கருத்து வேறுபாட்டை மாற்றி மீண்டும் அவர்களிடையே நல்லுறவை ஏற்படுத்தும் முயற்சியே என கூறப்பட்டது.

தமிழக முதல்வர் கருணாநிதியும் மத்திய அமைச்சர்கள் அ.தி.மு.க., பா.ஜ.க. உறவுக்கு முயன்று வருகிறது. பா.ம.க.வுக்கு பா.ஜ.க.வின் மீது எந்தகசப்புணர்வும் கிடையாது. அவர் தே.ஜ. கூட்டணியிலிருந்து விலகியதற்கு வேறு பல காரணஙகள் உள்ளது என கூறினார்.

அவர் மேலும் நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் அ.தி.மு.க.வின் தேர்தல் கூட்டணி பல மாறுபட்ட கருத்துகளின் மொத்த உருவமாக காணப்படுகிறது.

காங்கிரஸ் கட்சி ராஜீவ் காந்தி கொலைக்கு காரணமான விடுதலைப் புலிகளுக்கு பாட்டாளி மக்கள் கட்சி ஆதரவு அளிக்கிறது என குற்றம் சாட்டிவந்தது. ஆனால் இப்போது அந்த கட்சி அங்கம் வகிக்கும் கூட்டணியில் காங்கிரசும் சேருகிறது

பாட்டாளி மக்கள் கட்சி விடுதலை புலிகளுக்கு ஆதரவளிப்பதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜெயலலிதா முன்பு கூறியிருந்தார்.ஆனால் அவர் இப்போது அந்த கட்சியுடன் தேர்தல் கூட்டணி அமைத்துக் கொண்டுள்ளார்.

ஜெயலலிதாவின் மீது குற்றப்பத்திரிக்கைள் மட்டுமே தாக்கல் செய்ப்பட்டிருந்த போது இடது சாரி கட்சிகள் ஊழல் செய்த ஜெயலலிதாவுடன் கூட்டணிஅமைத்திருப்பதாக பா.ஜ.க. மீது குற்றம் சாட்டியது.

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றப்பத்திரிக்கை மட்டுமே தாக்கல் செய்யப்பட்டுள்ள மத்திய உள்துறை அமைச்சர், மேலும் இரண்டு மத்தியஅமைச்சர்கள் பதவி விலக வேண்டும் என இடது சாரியினர் கூறி வருகிறார்கள். ஆனால் இவர்கள் ஜெயலலிதாவுக்கு தண்டனை வழங்கப்பட்ட பின்பும்அவருடைய கூட்டணியில் இருக்கிறார்கள்.

ஜெயலலிதா தனக்கு வழங்கப்பட்ட தண்டனை உறுதியானதல்ல. மேல் கோர்ட்டுகள் அதை முடிவு செய்யும் என கூறியுள்ளார்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X