ரூ 24 லட்சம் மோசடி .. நிதி நிறுவன அதிபர் கைது
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரத்தில் பொதுமக்களின் பணமான ரூ 24 லட்சத்தை மோசடி செய்தது தொடர்பாக தனியார் நிதி நிறுவனஅதிபரைப் போலீஸார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட நிதி நிறுவன அதிபர் பெயர் மாதவன். இவர் காஞ்சிபுரத்தில் நிதி நிறுவனம் நடத்தி வந்தார்.இவரது கவர்ச்சிகரமான விளம்பரத்தைப் பார்த்து பொது மக்கள் பலர் இவரது நிதி நிறுவனத்தில் பணம் முதலீடுசெய்தனர். 50 க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் இவரது நிறுவனத்தில் முதலீடு செய்தனர்.
பணம் முதலீடு செய்து 2 வருடங்கள் ஆன பின்பும் இவர் முதிர்ச்சித் தொகையைக் கொடுக்காமல் காலம் கடத்திவந்தார். இதையடுத்து பணம் கொடுத்து ஏமாந்த முதலீட்டாளர்கள் போலீசில் புகார் கொடுத்தனர்.
இதையடுத்து போலீஸார் வலை வீசித் தேடி நிதி நிறுவன அதிபர் மாதவனைக் கைது செய்தனர். இவரதுநிறுவனத்தில் வேலை செய்து வந்த பாஸ்கர், தாண்டவராயன் மற்றும் பட்டாபிராமனைத் தேடி வருகின்றனர்.
யு.என்.ஐ.