கிரிக்கெட் குழப்பத்தை விசாரிக்கிறது கென்ய அரசு
நைரோபி:
கென்ய கிரிக்கெட் உலகில் நிலவும் குழப்பங்கள் குறித்து விசாரிக்க அந்நாட்டு விளையாட்டுத்துறை அமைச்சர் கடானா காலா உத்தரவிட்டுள்ளார்.
அதிக சம்பளம், மருத்துவ வசதி உள்ளிட்ட பல கோரிக்கைகளை கென்ய வீரர்கள் அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்திடம் முன் வைத்திருந்தனர். இதனை ஏற்கமறுத்த வாரியம், இக்கோரிக்கைக்காக போராடுவோம் என்று வீரர்கள் கூறியதால் கென்ய அணியிலிருந்து 11 வீரர்களை நீக்கியதோடு இந்தியாமற்றும் பங்களாதேஷிற்கு மேற்கொள்ளவிருந்த 2 மாத சுற்றுப்பயணத்தையும் ரத்து செய்தது.
இது குறித்து விசாரிக்க 6 நபர் கமிஷனை நியமித்த அரசு, கமிஷனின் விசாரணை முடியும் வரை கென்ய கிரிக்கெட் வாரியம் கூட்டங்கள் நடத்த தடைவிதித்துள்ளது.
வாரியத்தை கலந்தாலோசிக்காமல் எடுக்கப்பட்ட முடிவாகும் இது என்று வாரியம் குற்றம் சாட்டியுள்ளது. நீக்கப்பட்ட அணித் தலைவர் மோரிஸ்ஒடும்பே, அரசின் முடிவை வரவேற்றுள்ளதோடு, விரைவில் விசாரணையை முடித்து உண்மை நிலையை தெரிவிக்க வேண்டும் என்றார்.
பல்வேறு மாகாண கிரிக்கெட் கவுன்சில்கள் கோரியது போல் வாரியத்தின நிதி நிலைமை குறித்தும் விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications