மிகப்பெரிய ஓவியம் வரையத் திட்டம்
கோலாலம்பூர்:
உலகிலேயே மிகவும் நீளமான 1.2 கிலோ மீட்டர் நீளமுள்ள ஓவியம் ஒன்றை வரைய மலேசிய ஓவியரும், அவரது மகனும் திட்டமிட்டுள்ளனர்.
மலேசியாவைச் சேர்ந்தவர் ஹாஸ்பி சீ. இவர் மிகப்பெரிய ஓவியர். பல கண்காட்சிகளிலும் இவரது ஓவியங்கள் இடம்பெற்று பல பரிசுகளைத் தட்டிச்சென்றுள்ளன.
இதற்கிடையே இவர் தனது மகனும், ஓவியருமான ரோல்ப் ஹாரிஸை உலகிலேயே மிக நீளமான ஓவியம் வரைய ஊக்குவித்து வருகிறார். இவர்கூறுகையில், ஹாரிஸ் வரும் 2002 டிசம்பர் மாதத்திற்குள் ஓவியத்தை வரைந்து முடித்து விடுவார் என்றார். அவருக்கு ஹாஸ்பியும் உதவி செய்து வருகிறார்.
ஹாஸ்பியின் ஓவியங்கள் பல மலேசியாவில் உள்ள மியூசியங்களில் பலமுறை கண்காட்சியாக வைக்கப்பட்டுள்து. அரசு அலுவலகங்கள், ஹோட்டல்கள், தனியார்நிறுவனத்தார் பலர் ஹாஸ்பியின் ஓவியங்களை வாங்கிச் செல்கின்றனர்.
இப்போது இவர், தன் மகனுடன் சேர்ந்து 1.2 கிலோமீட்டர் நீளத்தில் ஓவியம் வரையத் திட்டமிட்டுள்ளார். இந்த ஓவியம் வரைவதற்கான முதற்கட்டவேலைகள் ஆரம்பமாகி விட்டன. தற்போது 40 மீட்டர் அளவுக்கு ஓவியம் முடிந்து விட்டது. ஹாஸ்பியின் ஓவியங்களுக்கு வெளிநாட்டவரிடம் நல்லவரவேற்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.