For Daily Alerts
Just In
கை வினைஞர்கள் பணி மையம்
கோவை:
கிராமங்களையும், நகரங்களையும் இணைக்கும் பாலமாக "கை வினைஞர் பணி மையம் நாடு முழுவதும் ஏற்படுத்தப்படும் என கோவையில் மத்திய ஊரகமேம்பாட்டுத் துறை அமைச்சர் வெங்கய்யா நாயுடு தெரிவித்தார்.
கோவையில் சுதேசிக் கண்காட்சியை பிரதமர் வாஜ்பாய் துவக்கி வைத்தார். இந்த விழாவில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடுபேசியதாவது:
கிராமத் தொழில்கள் மேம்பாட்டிற்காக கூட்டணி அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற் கொண்டுள்ளது. கிராமங்களில் உருவாக்கப்படும்பொருட்கள் நகரங்களில் விற்பனை செய்ய தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இதற்காக ஒவ்வொரு மாவட்டம் தோறும் கை வினைஞர்கள் பணி மையம் ஒன்று உருவாக்கப்படும். இங்கு உற்பத்தியாகும் பொருட்கள் நகரங்களில்விற்பனை செய்யப்படும் என்றார் வெங்கய்யா நாயுடு.
Story first published: Saturday, February 17, 2001, 5:30 [IST]