லிபியாவிலிருந்து உதவி
அகமதாபாத்:
ஜனவரி 26 ம் தேதி ஏற்பட்ட பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட குஜராத் மாநில மக்களுக்கு 5 விமானங்களில் லிபியா நிவாரணப் பொருட்களை அனுப்பிவைத்துள்ளது.
லிபியாவிலிருந்து 5 விமானங்களில் அனுப்பப்பட்ட நிவாரணப் பொருட்கள் ஏற்கனவே அகமதாபாத் வந்தடைந்து விட்டன. அங்கிருந்து கட்ச்மாவட்டத்திற்கு 2 விமான நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
உணவுப் பொருட்கள், துணிமணிகள் மற்றும் கம்பளிகள் லிபியாவிலிருந்து குஜராத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. லிபியா விமானத்துடன்,லிபியாவைச் சேர்ந்த அதிகாரிகள் முகமது அஜாஜ், மற்றும் செடிகா எல்காலோ ஆகியோர் வந்துள்ளனர்.
அவர்கள், லிபியா அதிபர் மியாமர் கடாபி அனுப்பியுள்ள இரங்கல் செய்தியைக் கொண்டு வந்துள்ளனர். லிபியாவுடன் சேர்த்து 20 நாடுகளிலிருந்து, குஜராத்துக்குநிவாரணப் பொருட்கள் வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications