காவல் துறையை பலப்படுத்துவோம் .. முதல்வர்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகத்தில் காவல் துறையை பலப்படுத்த மேலும் 3,500 போலீசார் நியமிக்கப்படுவார்கள் என தமிழக முதல்வர்கருணாநிதி தெரிவித்துள்ளார்.

சிவில் சர்வீசின் முக்கியத்துவம், பணி, இளைஞர்களின் எதிர்கால முன்னேற்றம் மற்றும் வளர்ச்சி குறித்தானகருத்தரங்கையும் கண் காட்சியையும் துவக்கி வைத்து பேசிய முதல்வர் கூறியதாவது:

தற்போதுள்ள 13,472 கான்ஸ்டபிள்கள், 2,343 சப்- இன்ஸ்பெக்டர் மற்றும் 4,052 பெண் கான்ஸ்டபிள்களை தவிரகூடுதலாக நியமிக்கப்பட உள்ளனர். இவர்களைத் தவிர 3,500 போலீசார் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

தீயணைப்பு துறையில் 2,127 தியணைப்புப் படை வீரர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 1,000-க்கும் மேற்பட்டோர்தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களும் விரைவில் பணியில் அமர்த்தப்படுவார்கள்.

இதே போல் கல்வித்துறையில் 41,887 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் எந்த விதமானசிபாரிசும், லஞ்சமும் இல்லாமல் நியமிக்கப்பட்டுள்ளனர். சுகாதாரத் துறையில் 2,641 மருத்துவர்களும் 1,750நர்ஸ்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

திருநெல்வேலி, நாங்குனேரியில் அமைக்கப்பட உள்ள தொழிற் பூங்கா

ரூ 8,000 கோடி செலவில் உருவாக்கப்படுகிறது. இது 1 லட்சத்துக்கும் அதிகமான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் என கூறினார்.

மத்திய திட்டக்கமிஷன் மற்றும் நிர்வாகத்துறை அமைச்சர் அருண் ஷோரி. இளைஞர் நலத்துறை அமைச்சர்பொங்கலூர் பழனிசாமி ஆகியோர் உள்பட பலரும் இந்த விழாவில் பங்கேற்றனர்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+