அமைதி ஏற்படுத்த ஜனாதிபதி வேண்டுகோள்

Subscribe to Oneindia Tamil

மும்பை:

Shipsஉலகம் முழுவதும் அமைதியையும், சமாதானத்தையும் ஏற்படுத்தும் வகையில் இளைஞர்கள் செயல்பட வேண்டும் என்று மும்பையில் சர்வதேச போர்க்கப்பல்களின் அணிவகுப்பை சனிக்கிழமையன்று தொ டங்கி வைத்த ஜனாதிபதி கே.ஆர்.நாராயணன் கூறினார்.

நட்புணர்வை வளர்ப்பதற்காக நடத்தப்படும் இந்நிகழ்ச்சி முதன் முறையாக இந்தியாவில் நடத்தப்படுகிறது. இதனை ஒட்டி வெளிநாடுகளை சேர்ந்த 25 போர்க்கப்பல்களும், 45 இந்திய போர்க் கப்பல்களும் மும்பை துறைமுகத்தில் அணி வகுத்துள்ளன.

ஐ.என்.எஸ். சுகன்யா என்ற ஜனாதிபதிக்கு உரிய கப்பலில் 21 குண்டுகள் முழங்க வரவேற்கப்பட்ட ஜனாதிபதி கே.ஆர். நாராயணன், பின்னர் அக்கப்பல்மூலம் அணிவகுப்பில் பங்கு பெறும் அனைத்து போர்க் கப்பல்களையும் பார்வைட்டார்.

பின்னர் அவர் கூறுகையில், நட்புணர்வை மேம்படுத்துவதற்காக இந்தப் போர்க்கப்பல்கள் அணிவகுப்பு நடத்தப்படுகிறது. உலகம் முழுவதிலுமுள்ள மக்கள்நட்புடனும், சகோதர பாசத்துடனும் இருக்க வேண்டும். நாட்டில் சமாதானமும், அமைதியும் ஏற்பட இளைஞர்கள் ஒன்று சேர வேண்டும் என்று கூறினார்.

8 வது சர்வதேச போர்க் கப்பல்களின் அணிவகுப்பு திருவிழாவான இதில், ஆஸ்திரேலியா, பங்களாதேஷ், பிரான்ஸ், இந்தியா, இந்தோனேஷியா, ஈரான்,இஸ்ரேல், ஜப்பான், கென்யா, மலேசியா, மாலத்தீவுகள், மொரீஷியஸ், மொராக்கோ உள்பட பல நாடுகள பங்கேற்றன.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+