அ.தி.மு.க கூட்டணியில் குழப்பம் என்கிறார் வைகோ
கோவை:
தமிழகத்தில் தற்போது உருவாகியுள்ள அ.தி.மு.க கூட்டணியில் குழப்பமான சூழ்நிலை நிலவி வருகிறது எனகோவையில் வைகோ தெரிவித்தார்.
கோவையில் பிரதமர் வாஜ்பாய் கலந்து கொள்ளும் பொதுக் கூட்டத்திற்கு வந்திருந்த ம.தி.மு.க பொதுச் செயலர்வைகோ, நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
தமிழகத்தில் தற்போது உருவாகியுள்ள அ.தி.மு.க கூட்டணியில் இப்போது குழப்பம் நிலவி வருகிறது. இந்தசூழ்நிலையில் மூப்பனார் முடிவை அறிவிக்க அவசரப்படுத்துகின்றனர்.
பொதுவாக மூப்பனார் மெதுவாகத்தான் முடிவெடுப்பார். அனைத்து வகைகளிலும் ஆராய்ந்து அவர் முடிவைச்சொல்லுவார். கடந்த 96ம் ஆண்டில் அவர் எடுத்த முடிவை மறக்க மாட்டார் என நினைக்கிறேன். எங்கள் அணிக்குஎப்போதும் தலைவர் கருணாநிதி தான். அவர் மூப்பனாரை அழைத்தால், அது எங்களது அழைப்பாகத் தான்இருக்கும். அவரது கருத்தே எங்களது கருத்தாக உள்ளது.
வாழப்பாடி ராமமூர்த்தி, மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் பதவி வகித்த பா.ம.க உறுப்பினர் பொன்னுச்சாமிமீது விசாரணை கமிஷன் வைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து நான் கருத்து தெரிவிக்கவிரும்பவில்லை என்றார் வைகோ.












Click it and Unblock the Notifications