For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திருச்சி: மினி வேன் மோதி 4 பேர் சாவு

By Staff
Google Oneindia Tamil News

திருச்சி:

திருச்சி அருகே மினி வேன் ஒன்று பேருந்து நிலையத்தில் காத்திருந்தவர்கள் மீது மோதியதில் 5 வயது குழந்தை, 1 பெண் உட்பட4 பேர் கொல்லப்பட்டனர். 15பேர் காயமடைந்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், திருச்சி - திண்டுக்கல் நெடுஞ்சாலையிவல் வையம்பட்டி அருகே வந்து கொண்டிருந்த மினி வேன் பேருந்துநிலையத்தில், பேருந்துகாக காத்துக் கொண்டிருந்த பயணிகள் மீது மோதியதில் அந்த இடத்திலேயே 4 பேர் கொல்லப்பட்டனர். 15 பேர் காயமடைந்தனர்.

இந்த வேன் அருகிலிருந்த கடை மீது மோதியதால் அந்த கடையும் சேதமடைந்தது. காயமடைந்த 15 பேரும் கி.ஆ.பெ. விஸ்வநாதம் அரசுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இறந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துமனைக்கு எடுத்துச் செல்லப்படப்பட்டுள்ளது என்றனர்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X