காஷ்மீரில் மீண்டும் சண்டை நிறுத்தம் நீட்டிக்கப்படுமா?
டெல்லி:
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் அமலில் உள்ள சண்டை நிறுத்தத்தை நீட்டிப்பது குறித்து விவாதிப்பதற்காக மத்தியஅமைச்சரவை பாதுகாப்புக் குழு உறுப்பினர்கள் ஞாயிற்றுக்கிழமை மாலை கூடி விவாதிக்கிறார்கள்.
ரம்ஜானை முன்னிட்டு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த நவம்பர் 28 ம் தேதி சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.இது பின்னர் ஜனவரி 28 வரை நீட்டிக்கப்பட்டது. அதற்குப்பின் மீண்டும் பிப்ரவரி 26 ம் தேதி வரைநீட்டிக்கப்பட்டது.
இதையடுத்து தற்போது மீண்டும் சண்டை நிறுத்தத்தை நீட்டிப்பது குறித்து ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் பரூக்அப்துல்லா, மத்திய உள்துறை அமைச்சர் அத்வானி, பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னான்டஸ் ஆகியோர்விவாதித்தனர். அப்போது பரூக் அப்துல்லா கூறுகையில் சண்டை நிறுத்தம் நீட்டிக்கப்படுவது நல்லதுதான். அதற்குநாங்கள் ஆதரவு தருவோம்.
ஆனால் தீவிரவாதிகளும் இதற்கு ஒத்துழைப்பு தர வேண்டும். லஸ்கார் இ தொய்பா, ஹிஸ்புல் முஜாஹிதின்தீவிரவாதிகள் சண்டை நிறுத்தத்திற்கு ஆதரவு தர வேண்டும் என்றார். இதற்கிடையே ஞாயிற்றுக்கிழமை மாலைமத்திய அமைச்சரவையின் பாதுகாப்புக் கமிட்டி சண்டை நிறுத்தத்தை நீட்டிப்பது குறித்து ஆலோசனை நடத்துகிறது.
தலைநகர் டெல்லியில் பிரதமர் இல்லத்தில் பிரதமர் வாஜ்பாய் தலைமையில் சண்டை நிறுத்தத்தை நீட்டிப்பது குறித்துவிவாதிக்கப்படும்.
யு.என்.ஐ.