கேரளாவில் மீண்டும் நிலநடுக்கம்
கொல்லம்:
கேரள மாநிலம் கொல்லம், ஆலப்புழா மாவட்டங்கள் உள்பட பல இடங்களில் சனிக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது.
கேரளாவில் கடந்த ஒரு வாரமாக அவ்வப்போது நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. சனிக்கிழமையும் திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டது.
கொல்லம் மற்றும் ஆலப்புழா மாவட்டங்களில் சுமார் 75 க்கும் மேற்பட்ட வீடுகள் நிலநடுக்கத்தால் சேதமடைந்தன. வீடுகளின் கண்ணாடிஜன்னல்கள் உடைந்து நொறுங்கின. வீடுகளில் வைக்கப்பட்டிருந்த பாத்திரங்கள், கட்டில்கள் உருண்டு விழுந்தன.
திடீரென்று ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பொதுமக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி ஓடினார்கள். குறிப்பாக கொல்லம் மாவட்டம்கருநாகப்பாளை, தொடியூர், குலசேகரபுரம், பன்மானா, சாஸ்தம்கோட்டா, குமரச்சிரா, சோரநாடு, பத்தாரம் மற்றும் அயாத்தில் ஆகிய கிராமங்களில்நிலநடுக்கத்தின் பாதிப்பு மிக அதிகமாக இருந்தது.
சனிக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிர்ச்சேதம் எதுவும் இல்லை. இருப்பினும் நிலநடுக்கத்தால் தூசு படிந்த அங்குள்ள கிணற்று நீரைச்சுவாசித்தவர்கள் மயக்கமடைந்தனர் என்று தெரிய வந்துள்ளது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications