காவிரி பிரச்சனை .. தீர்த்து வைப்பாரா சோனியா?
சென்னை:
தமிழக - கர்நாட மாநிலங்களுக்கிடையே நெடு நாட்களாகத் தீர்க்கப்படாமல் இருக்கும் காவிரி பிரச்சனையைத் தீர்க்க மத்திய காவிரி நதிநீர் ஆணையத்திடம்முறையிடுவேன் என்று சோனியா காந்தி கூறியதற்கு, சோனியா தீர்த்து வைத்தால் சந்தோஷப்படலாம் என்று தமிழக முதல்வர் கருணாநிதிஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
இதுகுறித்து முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், மயிலாடுதுறை வந்துள்ள அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அங்குபொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது, காவிரி பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும், விரைவில் இப்பிரச்சனையை முடிவுக்குக் கொண்டுவரும் வகையிலும் காவிரி நதீநீர் ஆணைய அதிகாரிகளை சந்தித்துப் பேசுவேன் என்று கூறியுள்ளார்.
காவிரி நதிநீர் பிரச்சனையை இவர் தீர்த்துவைத்தால் அதிகம் சந்தோஷப்படும் ஆள் நானாகத்தான் இருப்பேன். காவிரி பிரச்சனையில் காவிரி நதிநீர் ஆணையத்தின்தீர்ப்பை ஒத்துக் கொள்ள கர்நாடக அரசுதான் மறுப்பு தெரிவித்து வருகிறது. காவிரி நதிநீர்ப் பிரச்சனையில் இழுத்தடிப்பது கர்நாடக அரசுதான். தமிழகத்துக்கு205 டி.எம்.சி.தண்ணீர் விடுவதில் கர்நாடக அரசுதான் காலம் தாழ்த்தி வருகிறது.
கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்து வரும் இந்த நேரத்தில் காவிரி நதிநீர் ஆணையத்தைச் சந்தித்துப் காவிரி நீர் பிரச்சனையைத் தீர்த்து வைப்பேன் என்றுகூறியுள்ளார் சோனியா காந்தி.
காவிரி நதிநீர் ஆணையத்தைச் சந்தித்துக் கூறுவதை விட்டு விட்டு கர்நாடக அரசிடம் காவிரி நீர் பிரச்சனையைத் தீர்த்து வைக்குமாறு வேண்டுகோள் விடுக்கசோனியா காந்தி முயற்சி செய்ய வேண்டும் என்று தனது அறிக்கையில் கூறியுள்ளார் கருணாநிதி.
யு.என்.ஐ.