சோனியா ஆபத்தானவர்...சுவாமி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பாட்டாளி மக்கள் கட்சி இணைந்துள்ள அ.தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் சேருவது குறித்து காங்கிரஸ் கட்சியின் அர்ஜூன் சிங் கூறிய கருத்தை ஜனதா கட்சியின்சுப்ரமணிய சுவாமி விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து சென்னையில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
விடுதலைப்புலி ஆதரவாளர்களான பா.ம.க., அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்தவுடன அக் கூட்டணியிலிருந்து விலகவில்லை சோனியா காந்தி.
அ.தி.மு.க. கூட்டணியிலேயே தொடர்வது குறித்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியும், அர்ஜூன் சிங்கும் கூறியுள்ள கருத்துகள், விடுதலைப்புலிகளுடன் சோனியாவின் தாய் கொண்டுள்ள வியாபாரத் தொடர்பை உறுதிப்படுத்துவதாக உள்ளது.
ராஜீவ் காந்தியை கொன்றவர்களுடன் தொடர்பு கொண்டுள்ள சோனியா காந்தி ஆபத்தானவர் என்பதை தமிழக வாக்காளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்என்று தனது அறிக்கையில் கூறியுள்ளார் சுவாமி.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications