For Daily Alerts
Just In
காஞ்சிபுரம் கோவிலில் கொள்ளை
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோவில் பூஜை அறையில் வைக்கப்பட்டிருந்த பொருட்கள்கொள்ளையடிக்கப்பட்டுள்ளது என்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்துப் போலீஸார் கூறுகையில், அடையாளம் தெரியாத சிலர் அங்காள பரமேஸ்வரி கோவில் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே போய்பூஜையறைக்குள் வைக்கப்பட்டிருந்த பொருட்களைத் திருடிக் கொண்டு சென்று விட்டனர்.
இந்தக் கொள்ளைச் சம்பவத்திற்குப் பின்னணியில் உள்ளவர்கள் குறித்தான விவரங்கள் தெரியவில்லை. நாங்கள் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறோம் என்றனர்.
யு.என்.ஐ.
Comments
Story first published: Sunday, February 18, 2001, 5:30 [IST]