சோனியாவின் தூதர்கள் மூப்பனாருடன் சந்திப்பு
சென்னை:
தொகுதி பங்கீடு குறித்து ஜெயலலிதாவுடன் பேச்சு வார்த்தை நடத்த சென்னை வந்தகாங்கிரஸ் தலைவர்கள் பிரனாப் முகர்ஜியும், குலாம் நபி ஆசாத்தும் தமிழ் மாநிலகாங்கிரஸ் தலைவர் மூப்பனாரைச் சந்தித்துப் பேசினர்.
விடுதலைப் புலிகளின் ஆதரவு கட்சியான பா.மா.கட்சி அ.தி.மு.க. கூட்டணியில்இணைக்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்புவோம் என இவர்கள் தெரிவித்துள்ளனர்.
திங்கள்கிழமை மாலை பிரணாப் முகர்ஜியும், குலாம் நபி ஆசாத்தும் ஜெயலலிதாவைசந்தித்து தேர்தல் கூட்டணி குறித்து இரண்டாவது சுற்று பேச்சு வார்த்தைநடத்துகிறார்கள்.
அதற்கு முன் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர்கள் கருத்தை கேட்பதற்காக இருதலைவர்களும் தமிழக காங்கிரஸ் கட்சிதலைவர்களை கட்சி தலைமைஅலுவலகத்திலும், தங்கள் ஹோட்டல் அறையிலும் சந்தித்து பேசினர்.
பாண்டிச்சேரியிலிருந்து வந்திருந்த காங்கிரஸ் தலைவர்களும் முகர்ஜியையும்,ஆசாத்தையும் ஹோட்டல் அறையில் சந்தித்து பேசினார்.
பல காங்கிரஸ் தலைவர்களும் தேவையான அளவு தொகுதிகள் ஒதுக்கப்பட்டால்அ.தி.ம.க. வுடன் கூட்டணி வைத்துக் கொள்வதே நல்லது என கூறியதாக தெரிகிறது.
முன்னதாக இரு தலைவர்களும் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பனாரை சந்தித்து90 நிமிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அதன் பின் அவர்கள் நிருபர்களிடம்பேசுகையில், காங்கிரசும், த.மா.கா.வும்
இணைந்து செயல்பட்டு வருகின்றன.
த.மா.கா.வுக்கு 40 தொகுதிகள் ஒதுக்குவதாக தி.மு.க. தலைவர் கூறியுள்ளதுகாங்கிரஸ், த.மா.கா. உறவை பாதிக்காது.
பிரணாப் முகர்ஜி மேலும் கூறுகையில், மூப்பனாருடன் நடந்த பேச்சுவார்த்தைநம்பிக்கை அளிப்பதாக உள்ளது. பேச்சுவார்த்தையின் போது நாங்கள் தமிழகஅரசியல் சூழ்நிலை குறித்து விவாதித்தோம்.
அரசியலில் எதுவும் நடக்கலாம். எனவே மூன்றாவது அணி அமைவது கூடசாத்தியமே.
தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியின் தேர்தல் திட்டங்கள் குறித்து ஜெயலலிதாவுடன்பேச்சு நடத்துவோம் என கூறினார்.
தொகுதி பங்கீடு குறித்து திங்கள்கிழமை இறுதி முடிவு எட்டப்படுமா என்பது குறித்தகேள்விக்கு அவர் பதிலளிக்கவில்லை,
த.மா.கா.வின் எம்.பி. ஜெயந்தி நடராஜன் கூறுகையில், இரண்டு கட்சிகளும் இணைந்துசெயல்பட்டு வருகின்றன என்றார். ஆனால் இரு கட்சியினரும் ஒரே கூட்டணியில்இருப்பார்களா என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்க மறுத்து விட்டார்.
த.மா.கா. வினர் சிலர் கூறுகையில் மூப்பனார் மதசார்பற்ற கூட்டணியில் இருப்பதாககூறியுள்ளார். ஆனாலும் எந்த கட்சியுடன் தேர்தல் கூட்டணி என்பது குறித்து இன்னும்முடிவு எடுக்கப்படவில்லை, விரைவில் இறுதி முடிவு எடுக்கப்படும் என கூறினர்.
யு.என்,ஐ












Click it and Unblock the Notifications