பிஜி இடைக்கால அரசு பற்றிய விசாரணை
சுவா (பிஜி):
பிஜியின் இடைக்கால அரசு குறித்த அப்பீல் விசாரணைக்கு வருவதையொட்டி தலைநகர் சுவா முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த மே மாதம் இந்திய வம்சாவளி பிரதமர் மகேந்திர செளத்ரியின் அரசை பிஜியின் ஜியார்ஜ் ஸ்பைட் புரட்சியின் மூலம் கவிழ்த்தபின் இடைக்கால அரசுஅமைக்கப்பட்டது.
இவ்வாறு அமைக்கப்பட்ட அரசு செல்லுமா? செல்லாதா என்பது குறித்து 5 பேர் கொண்ட நீதிபதிகள் குழு இன்று விசாரிக்க தொடங்குகிறது. 2ஆஸ்திரேலிய நீதிபதிகள், நியூஸிலாந்து, சமோவா, டோங்கோ நாட்டு நீதிபதிகள் தலா ஒருவர் அடங்கிய இந்தக்குழு இடைக்கால அரசு அமைத்ததுசெல்லாது என அறிவித்தால் பிஜியில் உள்நாட்டு கலவரம் மூளும் என மக்கள் கருதுகின்றனர்.
கலவரம் வரக்கூடும் என்பது வதந்தியாக இருந்தாலும் பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்த வேண்டியது எங்கள் கடமை. எனவே, போலீசாருடன்இணைந்து தலைநகர் முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தி வருகிறோம் என ராணுவப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.