9 மாநிலங்களில் 12 தொகுதிகளில் இடைத்தேர்தல்
டெல்லி:
9 மாநிலங்களில் உள்ள 12 தொகுதிகளில் திங்கள் கிழமை இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
சட்டீஸ்கர் முதல்வர் காங்கிரஸின் அஜீத் ஜோகியும், ஜார்கண்ட் மாநில முதல்வர் பாபுலால் மராண்டியும் இத்தேர்தலின் மூலம் சட்டசபைக்குதேர்ந்தெடுக்கப்பட உள்ள முக்கியமான வேட்பாளர்களாவர்.
அஜீத்ஜோகி சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்படுவதற்காக மார்வாஹி தொகுதி பா.ஜ.க உறுப்பினர் பதவி விலகினார். ஆனால், தற்போது ஜோகியைஎதிர்த்து பா.ஜ.க.வேட்பாளரை நிறுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜார்கண்டில் மராண்டி போட்டியிடும் ராம்கர் தொகுதியில் தடை செய்யப்பட்ட மாவோ கம்யூனிஸ்ட்கள் தேர்தல் புறக்கணிப்பு செய்ய அழைப்பு விடுத்துள்ளனர்.அங்கு 103 வாக்குச்சாவடிகள் கலவரம் நிறைந்த பகுதியில் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
பஞ்சாப், பீகார், ராஜஸ்தான், மத்தியபிரதேசம், திரிபுரா, சட்டீஸ்கர், மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களில் தலா ஒரு தொகுதியிலும், ஆந்திராவில் 2தொகுதிகளிலும், உத்தரபிரதேசத்தில் 3 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. 447 வாக்குச் சாவடிகளில் எலக்ட்ரானிக் ஓட்டு எந்திரம்பயன்படுத்தப்படுகிறது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications