சேலத்தில் பூகம்ப ஆய்வு மையம் அமையுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பூகம்பம் வருவதை முன்கூட்டியே அறியும் ஆய்வு மையத்தை சேலத்தில் அமைக்க வேண்டும் என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் ஆலடி அருணா மத்தியஅரசிடம் வலியுறுத்தியுள்ளார்.

டெல்லியில் இயற்கை நிவாரணச் சீற்றங்களை எதிர் கொள்வதற்காக அமைக்கப்பட்ட தேசியக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு தமிழக சட்டஅமைச்சர் ஆலடி அருணா பேசியதாவது:

தமிழகத்தில் சேலம் மாவட்டத்தில் அவ்வப்போது நிலநடுக்கம் ஏற்படும் அபாயம் உள்ளது. இங்கு 1988, 1997 மற்றும் 2001 ஜனவரி 26 ல்சேலம் மாவட்டத்திலும், அதனைச் சுற்றியுள்ள சில மாவட்டங்களிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

திடீரென்று ஏற்படும் இயற்கைச் சீற்றங்களிலிருந்து உயிர்களைப் பாதுகாக்க மத்திய அரசு தனி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதை மாநிலங்கள் சரியானமுறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதை தவறாகப் பயன்படுத்தும் மாநில அரசுகள் மீது நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

தற்போது, மத்திய அரசு இயற்கை சீற்றங்களால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ள மாநிலங்களுக்கு 75 சதவீத நிதியுதவி செய்கிறது. இதை 90சதவீதமாக மாற்ற வேண்டும் என்றார் ஆலடி அருணா.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+