இந்தியாவில் அதிகரித்து வரும் போதைப் பொருட்கள் கடத்தல்
டெல்லி:
இந்தியாவில் போதைப் பொருட்கள் கடத்துவதிலும், தெற்காசியாவில் வெடிமருந்துகள் மற்றும் ஆயுதங்களைக்கடத்துவதிலும் ஒரு கும்பல் ஈடுபட்டுள்ளது என்று சர்வதேச போதைப் பொருட்கள் கட்டுப்பாட்டு வாரியம்செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சர்வதேச போதைப் பொருட்கள் கட்டப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கை:
மேற்கு ஆப்பிரிக்காவில் போதைப் பொருட்கள் கடத்தல் தொடர்பாக கைது செய்யப்படுபவர்களின் எண்ணிக்கைநாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
மேற்கு ஆப்பிரிக்காவில் ஹெராயின் என்ற போதைப் பொருட்கள் அதிக அளவு கடத்தப்படுகிறது. ஐரோப்பாவிலும்இது போன்ற கடத்தல் சம்பவங்கள் நடந்து வருகிறது.
தெற்காசிய நாடுகளான ஆப்கானிஸ்தான் மற்றும் மியான்மரில் ஹெராயின் கடத்தப்படுவது அதிகரித்து வருகிறது.இங்கிருந்து கடத்தப்படும் போதைப் பொருட்களுக்கு வங்க தேசம், இந்தியா மற்றும் இலங்கையில் விற்பனைசெய்யப்படுகிறது.
மியான்மரிலிருந்து கடத்தப்படும் ஹெராயின் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் வழியாக பிறமாநிலங்களுக்கும் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக மோர்க், சாம்ப் மற்றும்மோகோக்சங் ஆகிய பகுதிகளில் அதிக அளவு விற்பனை செய்யப்படுகிறது.
இந்தியாவில் மிசோரத்தில் போதைப் பொருட்கள் உபயோகப்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகமாகஇருப்பதால் சாவு எண்ணிக்கையும் அதிகமாக இருக்கிறது என்று சர்வதேச போதைப் பொருட்கள் கட்டுப்பாட்டுவாரியம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
யு.என்.ஐ.