நம்புங்கள்.. இவர் ஜெயலலிதா தான்!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ஜெயலலிதா என்றாலே 40 அடி, 80 அடி உயர கட்-அவுட் தான் நமக்கெல்லாம் நினைவுக்கு வரும்.

அதிமுக ஆட்சியில் இருந்தபோது அவர் செல்லும் வழியெல்லாம் கட்-அவுட்டால் வானத்தைத் தொட்டு பரவசப்பட்டனர் தொண்டர்கள்.

பகட்டும், ஆடம்பரங்களுமே தனக்கு வினையாகிவிட்டதை ஜெயலலிதா உணரத் தொடங்கியபோது காலம் கடந்து போயிருந்தது. ஆட்சி பறிபோயிருந்தது.

இப்போது ரொம்பவே மாறிவிட்டார் ஜெயலலிதா. கூட்டணிக் கட்சித் தலைவர்களை மதிப்பதில் ஆகட்டும், தொண்டர்களை கண்டிப்பதில் ஆகட்டும்நிறையவே மாற்றம் தெரிய ஆரம்பித்திருக்கிறது போயஸ் தோட்டத்தில்.

இப்போது இதற்கெல்லாம் உச்சமாக எனக்கு கட்-அவுட் வைக்க வேண்டாம் என்று தொண்டர்களுக்கு அன்புக் கட்டளை இட்டுள்ளார் ஜெயா.

இதுகுறித்து சென்னையில் கட்சித்தொண்டர்களிடம் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா கூறியதாவது:

தமிழகத்தில் கடந்த தேர்தலின் போது அதிமுக தொண்டர்கள் எனது பெரிய சைஸ் கட்-அவுட்டுக்களை உபயோகப்படுத்தியிருந்தார்கள். இதே போல் இந்ததேர்தலிலும் செய்தால் மக்கள் மத்தியில், அதிமுக ஆடம்பரச் செலவு செய்கிறது என்ற எண்ணம் ஏற்படும்.

இதனால் கட்சித் தொண்டர்கள் யாரும் ஆளுயர கட்-அவுட்டுக்கள் வைக்கவோ, மிகப் பெரிய போஸ்டர்கள் ஒட்டவோ வேண்டாம். போஸ்டர்கள்ஒட்டி, ஆளுயரக் கட் - அவுட்டுக்கள் வைத்து வீணாக பொதுமக்கள் மத்தியில் தவறான எண்ணத்தை உருவாக்க வேண்டாம்.

அதே போல், வரும் 24 ம் தேதி எனது பிறந்தநாள். இதையும் கட்சித் தொண்டர்கள் மிக ஆடம்பரமாகக் கொண்டாட வேண்டாம். மேலும் பிறந்தநாள் கொண்டாட்டம் என்ற பெயரில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் செயல்களில் கட்சித் தொண்டர்கள் யாரும் செயல்படக் கூடாது என்றுதொண்டர்களிடம் கூறியுள்ளார் ஜெயலலிதா.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+