பெண்கள் இயக்க தலைவி கொலை: சிஐடி விசாரணை
சென்னை:
பெண்கள் போராட்டக் குழுவின் உறுப்பினர் பஞ்சவர்ணம் கற்பழிக்கப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம்குறித்து சிபி- சி.ஐ.டி.விசாரணைக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் 23-ம் தேதி, சென்னை அண்ணா நகரில் பெண்கள் போராட்ட குழுவைச் சேர்ந்தபஞ்சவர்ணம் என்பவர் கொலை செய்யப்பட்டார்.
இதைக் கண்டித்தும் பெண்களுக்கு எதிராக நடந்து வரும் கொடுமைகள் குறித்தும், பஞ்சவர்ணத்திற்குஇழைக்கப்பட்ட பாலியல் வன்முறைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் பெண்கள் போராட்டக் குழுவினர் திங்கள்கிழமைபேரணி நடத்தினர். இந்தச் சம்பவம் குறித்து சிபி-சிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் அவர்கள்கோரினர்.
இதையடுத்து முதல்வர் கருணாநிதி பஞ்சவர்ணம் கொலை சம்பவம் குறித்து சிபி-சிஐடி விசாரணைக்குஉத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பெண்கள் முன்னேற்றத்திற்காக பாடுபட்ட ஒரு பெண்கற்பழிக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டுள்ளதால் தமிழக அரசு இந்த விவகாரத்தை மிக தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளது. இதையடுத்துத் தான் சிபி-சிஐடி விசாரணைக்கு கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications