மூப்பனார் தவிக்கிறார்... வைகோ சொல்கிறார்
கோவை:
காமராஜர் ஆட்சியை அமைக்க விரும்பும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் 3 வது அணியைத் தான் அமைப்பர்என திருப்பூரில் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
திருப்பூரில் நடந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோநிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
தமிழகத்தில் கடந்த ஜனவரி 26ம் தேதி முதல் பல்வேறு இடங்களில் நிதியளிப்புக் கூட்டத்தில் கலந்து கொண்டுபிரச்சாரம் செய்து வருகிறேன். மத்தியில் வாஜ்பாய் அரசினை வலுவுள்ளதாக நீட்டிக்கச் செய்ய தமிழகத்திலும்புதுவையிலும் தி.மு.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற வேண்டும்.
இந்தக் கூட்டணியில் எந்தக் கட்சி இடம் பெற்றாலும் பெறாவிட்டாலும், அது தேசிய ஜனநாயகக் கூட்டணியைப்பாதிக்காது. தமிழ் மாநில காங்கிரசைப் பொறுத்தவரை தமிழகத்தில் காமராஜர் ஆட்சியை அமைக்கவிரும்புகின்றனர். ஆனால் அவர்கள் அமைப்பது 3 வது அணியாக மட்டுமே இருக்கும். தற்போதுள்ளசூழ்நிலையில் எந்தப் பக்கம் சேருவது என்பது பற்றி மூப்பனார் முடிவெடுக்க முடியாமல் தவித்து வருகிறார்.
மதிமுக நிர்வாகிகள் கூட்டம்:
வரும் பிப். 25 ம் தேதி ம.தி.மு.க நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் நடக்கிறது. இதில் தேர்தலுக்குத் தயாராவதுபற்றி விவாதிக்கப்படும். ஆனால் தொகுதிப் பங்கீடு இதில் இடம் பெறாது. தொகுதிப் பங்கீட்டைப் பொறுத்தவரை,எவ்வித பிரச்னையும் எழாது என நினைக்கிறேன்.
முன்பு காங்கிரசை வீழ்த்த அ.தி.மு.க வை ஆதரித்தோம். இன்று சூழ்நிலை அப்படி இல்லை. வாஜ்பாய் கரத்தைவலுப்படுத்த வேண்டிய கடமை நமக்கு உள்ளது. ஜெயலலிதா ஜனநாயகத்தை மதிக்காதவர். தேர்தல் கருத்துக்கணிப்புகள் எல்லாம் உண்மையாகி விடுவதில்லை. கடந்த காலங்களில் கணிக்கப்பட்ட முடிவுகள் இதனைநிருபித்துள்ளது என்றார் வைகோ.












Click it and Unblock the Notifications