For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

போலீஸ் காவலில் தீவிரவாதி மாறன்..

By Staff
Google Oneindia Tamil News

கோவை:

சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மாறன் இன்று சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார். பின்னர் ராஜ்குமார் கடத்தல் தொடர்பானவிசாரணைக்காக போலீசார் தங்கள் பொறுப்பில் அவரை அழைத்துச் சென்றனர்.

கோவை அருகே உள்ள சீதை வனம் என்ற வனப் பகுதியில் வீரப்பன் கூட்டாளியான மாறன் பிடிபட்டார். இவர் மீது கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல்தொடர்பான வழக்கு உட்பட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. நடிகர் ராஜ்குமார் கடத்தல் தொடர்பான வழக்கு விசாரணைக்காகசத்தியமங்கலம் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மாறன் இன்று காலை ஆஜர் செய்யப்பட்டார்.

அவரை போலீஸ் விசாரணைக்காக தங்களது பொறுப்பில் அழைத்துச் செல்ல அனுமதி பெற்றனர். மூன்று நாள் விசாரணைக்கு பின் இவரை மீண்டும்சனியன்று கோர்ட்டில் ஆஜர் செய்ய மாஜிஸ்திரேட் உத்தரவிட்டுள்ளார். போலீஸ் விசாரணையின் போது ராஜ்குமாரை விடுவிப்பதற்காகஅளிக்கப்பட்டதாகக் கூறும் பணத்தை புதைத்து வைக்கப்பட்ட இடத்தை காட்ட இவர் அழைத்துச் செல்லப்படுவார் என கூறப்படுகிறது. மேலும்,ராஜ்குமாருடன் தங்கிய இடங்கள், வீரப்பன் வழக்கமாகப் பதுங்கப் பயன்படுத்தப்படும் இடங்கள் ஆகியவை குறித்தும் விசாரணை நடத்த போலீசார் முடிவுசெய்துள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X