பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியிலில் மேலும் 49 ஜாதிகள் சேர்ப்பு
பாண்டிச்சேரி:
பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியலில் மேலும் 49 ஜாதிகளை பாண்டிச்சேரி அரசுசேர்த்துள்ளது.
லத்தீன் கத்தோலிக்கர்கள், வன்னியர்கள் மற்றும் யாதவர்கள் உள்ளிட்டோர் இப்போதுஇந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
இவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு, கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடுவழங்கப்படும்.
இது குறித்து அரசு செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
பிற்படுத்தப்பட்டவர்களில் பொருளாதாரத்தில் முற்பட்டோருக்கு (க்ரீமி லேயர்) இந்தஇட ஒதுக்கீடு கொடுக்கப்பட மாட்டாது என கூறப்பட்டுள்ளது,
பிற்படுத்தப்பட்டோருக்கு அளிக்கப்பட்டு வரும் இடஒதுக்கீட்டை 27 சதவீதத்திலிருந்து34 சதவீதமாக உயர்த்துவது, கிரீமி லேயர் வருமான உச்சவரம்பை அதிகரிப்பது,பிற்படுத்தப்பட்டவர்களில் மிகவும் பின் தங்கியவர்களை (எம்.பி.சி.) அடையாளம்காண்பது போன்ற கோரிக்கைகளுக்கு மத்திய அரசின் அனுமதியை பாண்டிச்சேரி அரசுகோர உள்ளது.
யு.என்.ஐ.