For Daily Alerts
Just In
இலங்கையில் 10 கடற்புலிகள் பலி
கொழும்பு:
இலங்கையில் நடுக்கடலில் இலங்கை கடற்படை வீரர்களுக்கும், கடற்புலிகளுக்கும் இடையே நடந்த சண்டையில், 10 கடற்புலிகள் கொல்லப்பட்டனர்.மேலும் புலிகளின் இரண்டு படகுகள் கடலில் மூழ்கடிக்கப்பட்டது என்று இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, இலங்கை ராணுவ செய்தித் தொடர்பாளர் சனத் கருணாரத்னே கூறியதாவது:
புதன்கிழமை அதிகாலை பெட்ரோ துறைமுகம் அருகே நடுக்கடலில் கடற் புலிகளுக்கும், இலங்கை கடற்படை வீரர்களுக்கும் இடையே சண்டை நடந்தது.இதில் கடற்படை வீரர்களின் படகுகளில் சேலாசன சேதம் ஏற்பட்டது.
இந்தத் தாக்குதலில் 10 கடற்புலிகள் கொல்லப்பட்டனர். இரு தரப்பினருக்கும் இடையே நடந்த சண்டையில் கடற்புலிகளின் இரண்டு படகுகள் நீரில்மூழ்கடிக்கப்பட்டன என்றார். இந்தச் சம்பவம் குறித்து வேறு தகவல்கள் உடனடியாகக் கிடைக்கவில்லை.
யு.என்.ஐ.
Comments
Story first published: Wednesday, February 21, 2001, 5:30 [IST]