ஜெ.விடம் கையேந்தி நிற்கும் த.மா.கா: தி.மு.க கிண்டல்

Subscribe to Oneindia Tamil

கும்பகோணம்:

25 இடங்களுக்காக போயஸ் தோட்டத்தில் கையேந்தி நிற்கிறது த.மா.கா. என்று ஆற்காடு வீராசாமி கூறினார்.

கும்பகோணத்தில் ரூ 48 கோடி செலவில் அமைக்கப்பட உள்ள பாதாள சாக்கடைத் திட்ட அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டு ஆற்காடு வீராசாமிபேசியதாவது:

உணவு உற்பத்தியில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு வரை பஞ்சாப் மாநிலம் முதலிடத்தில் இருந்தது. இப்போது தமிழகம் முதலிடத்தில் உள்ளது.

இதே போல் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவது, கிராமங்களில் தெரு விளக்கு, குடிநீர், மின்சார வசதி போன்ற அடிப்படை திட்டங்களைநிறைவேற்றுவதிலும் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.

சொன்னதை மட்டுமின்றி சொல்லாததையும் செய்து வருகிறது திமுக அரசு. தகவல் தொழில் நுட்பத்துறையில் தமிழகம், கர்நாடகம், ஆந்திர மாநிலங்களைவிட முன்னணியில் நிற்கிறது தமிழகம். இதற்கு முதல்வர் கருணாநிதிதான் காரணம்.

சென்னையில் ரூ 348 கோடியில் அமைக்கப்பட்ட டைடல் பார்க்கை திறந்து வைத்தார் வாஜ்பாய். டைடல் பார்க் திறந்த பிறகு தமிழகம் தகவல்தொழில்நுட்பத்தில் எந்த அளவு முன்னேறியிருக்கிறது என்பதை ஜப்பான், ஜெர்மன் நாட்டினர் பாராட்டுகிறார்கள்.

தேர்தல் நெருங்கும் இந்த நேரத்தில் 25 இடங்களுக்காக போயஸ் தோட்டத்தில் கையேந்தி நிற்கிறார்கள் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர். அவர்களதுநோக்கமெல்லாம் ஜெயலலிதா ஆட்சியைப் போல் கொள்ளையடிக்க வேண்டும் என்பதாகும் என்றார் ஆற்காடு வீராசாமி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+