For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மின் விநியோகம் அதிகரிப்பு .. நுகர்வும் அதிகரிப்பு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழகத்தில் கடந்த பிப்ரவரி 21ம் தேதி பீக் அவர் மின்சாரத்தின் தேவை 6360 மெகா வாட்டாக அதிகரித்துள்ளது. இது பிப்ரவரி 16ம்தேதி இருந்தஉயர்ந்த பட்ச தேவையின் அளவான 6191 மெகாவாட்டை விட அதிகம்.

இதுகுறித்து மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கை:

பிப்ரவரி 21ம் தேதி தமிழகத்தின் மொத்த மின்நுகர்வின் அளவு, அதிகபட்ச அளவாக 126 மெகா யூனிட்டுகளாக இருந்தது. இது கடந்த 10ம் தேதி 125மெகா யூனிட்களாக இருந்தது. தமிழகத்தில் மின்னுற்பத்தி அதிகளவில் இருப்பதால் தேவைக்கேற்ப மின் விநியோகம் அளிக்க முடிகிறது.

மேலும், மார்ச் மாதம் தொடங்கவுள்ள 105 மெகா வாட் திறனுள்ள சாமளபட்டி மின்னுற்பத்தி நிலையம், ஏப்ரல் மாதம் தொடங்கவுள்ள 330மெகா வாட் திறனுள்ள பில்லிபெருமாள்நல்லூர் மின்னுற்பத்தி நிலையங்களின் மின்சார உற்பத்தியானது தமிழகத்தில் கோடைகாலத் தேவையை சமாளிக்கஉதவும் என மின்சார வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X