சென்னையில் புதிய சுற்றுலா வளாகம் திறப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
டெல்லியில் உள்ள பாரத் பரியதன் பவன் போன்று தமிழ்நாடு சுற்றுலா வளாகம் ஒன்றை சென்னையில்தமிழக முதல்வர் கருணாநிதி வியாழக்கிழமை திறந்து வைத்தார்.
இரண்டரை கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்படும் இந்த வளாகத்தில் இந்திய அரசுசுற்றுலாத்துறை அலுவலகம் உள்பட பல மாநிலங்களின் சுற்றுலாத்துறைஅலுவலகங்கள் இடம்பெறும். தமிழக சுற்றுலா வளர்ச்சித்துறையின் தலைமைஅலுவலகம் மற்றும் தமிழக சுற்றுலா இயக்குநரகத்தின் அலுவலகமும் இங்குஇடம்பெறும்.
இந்த வளாகத்தில் சுற்றுலா தகவல் மையம், சுற்றுலா பற்றிய கண்காட்சி அரங்கு,உணவக வசதி, பொது தொலைபேசி வசதி, தபால் அலுவலகம், மற்றும் வங்கி வசதிகள்ஆகியவை இடம் பெற்றிருக்கும்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications