For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நேர்மையான தேர்தல் சாத்தியமா?: சேஷன் விளக்கம்

By Staff
Google Oneindia Tamil News

பெங்களூர்:

இந்தியாவில் உள்ள வாக்காளர்கள் குறித்து உண்மையான விவரங்களை சேகரித்து அனைத்து வாக்காளர்களுக்கும்அடையாள அட்டை வழங்கப்பட்டால் மட்டுமே தேர்தல் நியாமான முறையில் நடக்க சாத்தியமில்லை என்றுமுன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி சேஷன் பெங்களூரில் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

பெங்களூரில் ஐ.எம்.டி சார்பில் நடந்து கொண்டிருக்கும் கருத்தரங்கு ஒன்றைத் திறந்து வைத்து அவர் பேசுகையில்,பல ஆண்டுகளுக்கு முன் இறந்த ஒருவரின் பெயர் தற்போதைய வாக்காளர் பட்டியலில் பல பெயர்களில் உள்ளது.

18 வயதை அடைந்த நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெறவில்லை.இவை தவிர பெரும்பாலான வாக்காளர்களின் பெயர்கள் வாக்குசீட்டில் இடம்பெறவில்லை.

இந்த சூழ்நிலையில் நடைபெறும் தேர்தல் நடுநிலைமையுடன் இருக்காது. இந்த நேரத்தில் வாக்காளர் அடையாளஅட்டையை அறிமுகப்படுத்தியுள்ளார் தலைமை தேர்தல் ஆணையர் கில். அவரது முயற்சிக்கு முழு அளவு வெற்றிகிடைக்கவில்லை.

இவ்வாறு முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் சேஷன் கூறினார்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X