அப்துல் மதானி ஆதரவு ஊர்வலத்துக்குத் தடை

Subscribe to Oneindia Tamil

கோவை:

கோவை வெடிகுண்டு வழக்கில் கைது செய்யப்பட்ட கேரள மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் அப்துல் நாசர்மாதனியை விடுதலை செய்யக் கோரி ஊர்வலம் நடத்த போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.

கோவையில் கடந்த 98ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடந்த வெடிகுண்டு சம்பவம் தொடர்பாக கேரள மக்கள்ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த அப்துல் நாசர் மாதனி கைது செய்யப்பட்டார்.

கடந்த ஓராண்டிற்கு மேலாக கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள அப்துல் நாசர் மதானியை விடுதலை செய்யவேண்டும் என அவரது கட்சித் தொண்டர்கள் ஜாமீனில் அவரை விடுவிக்கக் கோரி மனுச் செய்தனர். ஆனால்,அவரது மனு தொடர்ந்து நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து தற்போது போராட்டத்தில் இறங்க முடிவு செய்தனர்.

இதன்படி அப்துல் நாசர் மதானியை விடுவிக்கக் கோரி, கேரள எல்லையான வாளையாரிலிருந்து கோவைக்குஊர்வலம் செல்ல முடிவு செய்தனர். இதற்காக கோவை போலீசாரிடம் முன் அனுமதி கேட்டனர். ஆனால் கோவைபோலீசார் ஊர்வலம் செல்ல அனுமதி மறுத்துள்ளனர். இந்த நிலையில் அடுத்த கட்டப் போராட்டம் நடத்ததொண்டர்கள் முடிவு செய்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+