For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தீவிரவாதத்தைத் தடுப்போம்: அத்வானி

By Staff
Google Oneindia Tamil News

கோஹிமா:

தீவிரவாதத்தை முறியடிப்பதற்கும், அதைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்கும் மத்திய அரசு பல வழிகளைக் கடைபிடிக்க உள்ளதாக மத்திய உள்துறைஅமைச்சர் அத்வானி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

நாகலாந்து தலைநகர் கோஹிமாவில் மத்திய உள்துறை அமைச்சர் அத்வானி நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

இந்தியாவில் தீவிரவாதிகளின் தாக்குதல்கள், அவர்கள் செய்யும் குற்றங்கள் ஆகியவை நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன.

இந்தியாவில் தீவிரவாத செயல்களில் ஈடுபடுவதற்கு, நேபாளம், பூட்டான் மற்றும் வங்க தேசத்தைத் தீவிரவாதிகள் களமாகப் பயன்படுத்துகிறார்கள். மத்திய அரசு தீவிரவாதிகளை ஒடுக்குவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.

மேலும் சம்பந்தப்பட்ட நாடுகளுடன் இதுகுறித்துப் பேசி சர்வதேச அளவில் தீவிரவாதத்தைத் தடுத்து நிறுத்துவதற்கான பணிகளை இந்தியாமேற்கொள்ளும்.

மாநிலத்தில் அமைதி ஏற்பட அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது நாகலாந்து அரசு.

நாகலாந்தில் தீவிரவாதத்தை தூண்டு விடும் தீவிரவாத இயக்கங்களுக்கு எதிராக சண்டை நிறுத்தம் அறிவித்து அமைதி ஏற்பட வழிவகுக்கிறதுஇந்தியா.

நாகலாந்தில் நடக்கும் பிரச்சனைகளை, மத்திய அரசு விரைவில் ஆலோசனை நடத்தி தீர்த்து வைக்கும் முயற்சிகளில் ஈடுபடும் என்றார் அத்வானி.

ஐ.ஏ.என்.எஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X